https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

 

பத்தாம் வகுப்பு

இயல் 5

1.ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது----என்கிறார் மணவை முஸிதபா

2.ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் ----- இன்றியமையாததாகும்

3.உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்கிறார்-----

4.தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும்-----மொழிபெயர்ப்பை ஒரு கருவியாக்க் கொண்டது

5.மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள்

6.தன் அனுபவத்தை எழுதுவது-----ஆகும்

7.-------அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது

8.ஷேக்ஸ்பியர் எந்த நாட்டின் படைப்பாளர் போலவே கொண்டாடபட்டார்

9.கீதாஞ்சலியை எழுதியவர் யார்?

10.ஒரு நாட்டின் எந்த ஆற்றலைக் கொண்டு தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள்

11.மொழிபெயர்ப்பின் மூலம்----கொள்கைகளையும் பெற்றிருக்கிறோம்

12.புதைச்சாக்கடை என்பது எந்த மொழியில் பயன்படுத்திய சொல்

13.Tele என்பது--------என்பதைக் குறிக்கிறது

14.ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து-----------வரை மொழிபெயர்க்கப்படுகின்றன

15.புள்ளி விவரப்படி அதிகமான --------- நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன

16.கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப்----------என்று குறிப்பிடுவார்கள்

17.நீதி வெண்பா எழுதியவர்

18.சதம் என்றால்—என்று பொருள்

19.செய்கு தம்பி பாவலர் எந்த ஊரைச்சார்ந்தவர்

20.சீறாபுராணத்திற்கு உரை எழுதியவர் யார்?

21.செய்கு தம்பி பாவலர் சதாவதானி பட்டம் வென்ற ஆண்டு

22 செய்கு தம்பி பாவலர் மணிமண்டபம் எங்கு உள்ளது?

23.திருவிளையாடர் புராணம் எழுதியவர்?

24.குலேசகர பாண்டியர் எந்த நாட்டை ஆட்சி செய்தார்?

25.கபிலரின் நண்பர் யார்?

26.திருவிளையாடர்புராடம் எத்தனைக் காண்டங்களை உடையது

27.எத்தனை படலங்களைக் கொண்டது

28.பரஞ்சோதி முனிவர் -------- ஊரில் பிறந்தார்

29.இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

இலக்கணக் குறிப்பு

30.கேள்வியினான்

31.காடனுக்கும்,கபிலனுக்கும்

32.கவரி வீசிய மன்னர் யார்?

33.கண்ணயர்ந்த புலவர் யார்?

34.மாசர விசித்த வார்புறு வள்பின் என்னும் செய்யுள் வரி இடம் பெற்ற நூல்

35.புதிய நம்பிக்கை எழுதியவர் யார்?

36.கல்வி மறுக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர்,அமெரிக்க கறுப்பினப் பெண்மணி யார்?

37.வினாவகை எத்தனை வகைப்படும்?

38.தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது

39.ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காக கேட்கப்படுவது

40.பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது

41.விடை எத்தனை வகைப்படும்?

42.உடன்பட்டுக் கூறும் விடை

43.வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்---------விடை

44.வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாக கூறல்

45.பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

46.ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல் நிறையாக அமைத்து வருவது

47.நிரல் நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

இயல் 6

48.பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே---------

49.கரகம் என்பது எது?

50.நீரற வறியாக் கரகத்து என்ற----------பாடலடியில் கரகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது

51.சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் -----------என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது

52.கா என்பதற்குப் -------- என்று பொருள்

53.உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும்---------தேவராட்டத்திற்குறிய இசைக்கருவி

54.தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருவது

55.-------பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திகாட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று

56.புரவி ஆட்டம்,புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்-----------

57.இவ்வாட்டம் யார் காலத்தில் தஞ்சைக்கு வந்தது

58.தப்பாட்டத்தை -------- என்றும் அழைப்பர்

59.தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப்--------இடம் பெறுகிறது

60.நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே--------

61.தெருக்கூத்து,-----------செய்வோரின் கலையாக இருந்தது

62.மழை வேண்டி நிகழ்த்தப்படும் கலை------

63.மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்படும் நீதி நூல்

64.தோற்பாவைக் கூத்துப் பற்றிக் கூறும் பாடல்----------

65.கையுறைப் பாவைக் கூத்து,பொம்மலாட்டம் என்று அழைக்கப்படும் கூத்து

66.--------கலை ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன

67.பூத்தொடுத்தல் இதை எழுதியவர்

68.உமா மகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தார்

69.முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் எழுதியவர்

அணிகலன்கள்

70.சிலம்பு,கிண்கிணி—

71.அரைநாண்—

72.சுட்டி---

73.குண்டலம்,குழை---

74.சூழி------

75செங்கீரைப்பருவம் குழந்தையின் எத்தனையாவது பருவம்

76.சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்

77.பிள்ளைத் தமிழ் எத்தனை வகைப்படும்

78.குமரகுருபரர் காலம்

79.இராமாயணத்துக்கு கம்பர் இட்ட பெயர்

80.கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது

81.கம்பரின் ஊர்

82.பாய்ச்சல் எழுதியவர்

83.எந்த சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம் பெற்றுள்ளது

84.சா.கந்தசாமி இவர் எந்த புதினத்தால் புகழ் பெற்றார்

85.கந்தசாமி எந்த புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார்

86.இவர் எடுத்த எந்த குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றார்

87.சூர்யவம்சம் யார் எழுதிய புதினம்

88.அனபுடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது

89.குறிஞ்சி,நெய்தல்,முல்லை,மருதம்,பாலை என்பவை ---------------திணைகளாகும்

90.பொழுது எத்தனை வகைப்படும்

91.மலையும் மலை சார்ந்த இடம்

92.ஓராண்டின் ஆறு கூறுகளை -----------என்று நம் முன்னொர் பிரித்துள்ளனர்

93.ஒரு நாளின் கூறுகளை ------------- என்று நம் முன்னோர்கள் பிரித்துள்ளனர்

94.குறிஞ்சி நிலத்தின் தெய்வம்

95.முல்லை நிரத்தின் மக்கள்

96.மருதம் நிலத்தின் உணவு

97.நெய்தல் நிலத்தின் விலங்கு

98.பாலை நிலத்தின் பூ

99.குறிஞ்சி நிலத்தின் மரம்

100.முல்லை நிலத்தின் பறவை

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

புனைப் பெயர்கள்