https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

T N P S C வினா விடை 2


பராபரக் கண்ணியை எழுதியவர்                           தாயுமானவர்

கண்ணி  என்பது இரண்டு அடிகளில் பாடப்படுவது

தமிழ் மொழியின் உபநிடதம் எனக் கூறப்படும் நூல் தாயுமானவர் பாடல்கள்

திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தவர்  தாயுமானவர்

தண்டருள் பொருள் குளிர்ந்த கருணை

கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்   லெபனான்

கலீல் கிப்ரான் எழுதிய நூலை மொழிபெயர்த்தவர் புவியரசு

புவியரசு மொழிபெயர்த்த நூலின் பெயர் தீர்க்கதரிசி

பசிப்பிணி போக்கிய பாவை மணிமேகலை

அமுதசுரபி கிடைத்தத் தீவின் பெயர் மணிபல்லவத் தீவு

மணிபல்லவத் தீவை பாதுகாத்த பெண்ணின் பெயர் தீவதிலகை

மணிபல்லவ தீவிற்கு மணிமேகலா தெய்வம் யாரைக் கொண்டு வந்தது? 
                                                                                                     மணிமேகலையை

மணிபல்லவத் தீவில் இருந்தது என்ன?           புத்தபீடிகை

மணிபல்லவத் தீவில் உள்ள பொய்கையின் பெயர் என்ன?கோமுகி

கோமுகி என்றால் என்ன?கோ என்றால் பசு
                                                            முகி என்றால் முகம் 
                                                                பசுவின் முகம் என்று பெயர்

மணிமேகலை எந்த ஊரைச் சேர்ந்தவள்?பூம்புகார்

மணிமேகலையின் பெற்றோர் பெயர் என்ன?கோவலன் , மாதவி

வைகாசித் திங்கள் முழுநிலவு நாளில் பொய்கையின் மீதில் என்ன தோன்றும்?ஆபுத்திரன் கையிலிருந்த அரிய பாத்திரமான அமுதசுரபி

பாதம் என்னும் சிறுகதை நூலை எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன்

தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன்

 
  • தாராபாரதியின் இயற்பெயர் இராதா கிருஷ்ணன்
  • தாராபாரதியின் அடைமொழி கவிஞாயிறு
  • இவர் இயற்றிய நூல்கள் 1 புதிய விடியல்கள் 2 இது எங்கள் கிழக்கு 3 விரல் நுனி
  • ' புதுமைகள் செய்த தேசமிது' என்ற பாடல் தாராபாரதியின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • தேசம் உடுத்திய நூல் எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் திருக்குறள்
  • காளிதாசனின் தேனிசைப்பாடல்கள் எதிரொலிக்கும் இடம் காவிரிக்கரை
  • காந்தியடிகள் எப்போது சென்னை வந்தார்    1919 பிப்ரவரி மாதம்
  • ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்திய ஆண்டு 1919
  • ரௌளட் சட்டம் பற்றிய கருத்தாய்வு கூட்டம் யார் வீட்டில் நடைப்பெற்றது இராஜாஜி வீட்டில்
  • இராஜாஜி வீட்டில் காந்தியடிகள் அருகே அமர்ந்த கவிஞர் பாரதியார்
  • யார் எழுதிய கையேடு தம்மைக் கவர்ந்ததாக காந்தியடிகள் கூறினார் ஜி.யு.போப்
  • காந்தியடிகளைக் கவர்ந்தநூல் எது? திருக்குறள்
  • காந்தியடிகள் தலைமை வகித்த இலக்கிய மாநாடு சென்னையில் நடைபெற்ற ஆண்டு 1937
  • 1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாட்டில் வரவேற்புகுழுத் தலைவராக இருந்தவர் யார்? உ.வே.சாமிநாதர்
  • காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றம் ஏற்படுத்திய ஊர்? மதுரை
  • காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று கூறினார்? உ.வே.சா
  • வேலுநாச்சியாரின் தந்தை பெயர் செல்லமுத்து
  • வேலுநாச்சியார் அறிந்திருந்த மொழிகள் ஆங்கிலம் , பிரெஞ்சு , உருது
  • வேலுநாச்சியார் கற்றுக் கொண்ட வீரச்செயல்கள் சிலம்பம் , குதிரை ஏற்றம் , வாள்போர் , வில் பயிற்சி
  • வேலுநாச்சியாரின் கணவர் பெயர் முத்து வடுக நாதர்
  • முத்து வடுக நாதர் எங்கு நடைபெற்ற போரில் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார் ? காளையர் கோவிலில்
  • வேலுநாச்சியாரின் அமைச்சரின் பெயர் தாண்டவராயர்
  • வேலுநாச்சியாரின் தளபதிகளின் பெயர் பெரிய மருது , சிறிய மருது
  • மைசூரிலிருந்து யாருடைய படை திண்டுக்கல்லுக்கு வந்தது ஐதர் அலி
  • வேலுநாச்சியாரின் படையில் ஆண்கள் படைக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்
  • சிவகங்கைக் கோட்டையின் கதவு எந்தத் திருநாள் அன்று திறந்திருக்கும் விஜயதசமி
  • வேலுநாச்சியாரை காட்டிக் கொடுக்கும் படி ஆங்கிலேயர் வற்புறுத்திய பெண் யார் ? உடையாள்
       
இன்னொரு பூமியா


 நம் சூரியகுடும்பத்தின் ஒன்றானது சனி கோளாகும்.இக் கோளத்திற்கு 82  நிலவுகள் உள்ளது.அதில் ஒன்றுதான் டைட்டன் என்ற நிலவு.இது பார்ப்பதற்கு பூமியை போன்றே தோற்றமளிக்கிறது.இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும் , ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர்.

     டைட்டனில் ஆறு ,குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இந்த டைட்டனில் இருக்கிறது எனவும் கூறுகின்றனர்.இதனை பூமி 2.0 என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

       பருவ நிலைகளின் மாற்றங்கள் மற்றும் மணல் சுழற்சியின் காரணமாக உருவான இந்த டைட்டனின் மேற்பரப்பில் உள்ள ஏரிகள் பூமியில் இருப்பதை விட வெவ்வேறான பொருட்களால் நிரம்பியுள்ளன.

         திரவ மீத்தேனால் ஆன நீரோடை பனிக்கட்டி மீது படிந்துள்ளது காற்றில் நைட்ரஜன் உள்ளது. இது ஹைட்ரோகார்பன் மணல் திட்டுகளை உருவாக்குகிறது.

        டைட்டனில் தனித்துவமான குன்றுகள் , சமவெளிகள் மற்றும் நிலபரப்புகளை உருவாக்க முடியுமென  ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக புவியியலாளர் மேத்யு லபோட்ரே தலைமையிலான ஆராய்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

          இந்த ஆராய்ச்சி குறித்து புவியியலாளர் மேத்யு லபோட்ரே கூறியதாவது :

                                 பூமியில் உள்ள குன்றுகள் சிலிகேட் பாறைகள் தாதுக்களால் உருவாகின்றன.அவை காலப்போக்கில் வண்டல் துகள்களால் அரிக்கப்பட்டு ,நிலத்தடிநீர் மற்றும் சில நேரங்களில் வெப்பத்தின் உதவியுடன் மீண்டும் பாறைகளாக மாறும்.டைட்டனில் இதே போன்ற செயல் முறைகள் தான் குன்றுகள்,சமவெளிகள் மற்றும் சமதள நிலபரப்பை உருவாக்கியது. 

                           டைட்டனில் பூமத்திய ரேகைக்கு அருகில் காற்று இருப்பது தெரிய வந்துள்ளது.டைட்டன் எனப்படும் மாற்று உலகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தும் வித்தியாசமானவையாக உள்ளன.ஆனால் அவை பூமியின் தன்மையுடன் காணப்படுகிறது என்பதை கவரும் அம்சமாக உள்ளது.

                 


                        இவ்வாறு அவர் கூறினார்      

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்