https://nainthamizh.blogspot.com/p/contact-us.html

வானொலி தோற்றமும் வளர்ச்சியும்

  தோற்றம் ஒரு வகையில் தொலைபேசி முறையே வானொலித் தோற்றத்திற்கு ஒரு ஊக்கம் கொடுத்த முறையாக இருந்தது எனக் கூறலாம் . தந்தி முறை கம்பிகள் மூலம் தகவல் அனுப்பும் முறையாக இருந்தது . அறிவியல் தகவல் அனுப்புவதற்கான அடிப்படை எனக் கருதப்பட்டு வந்த கம்பியை அறுத்து எடுத்துவிட்டது . கம்பியில்லா முறையில் தகவல் அனுப்பலாம் என்ற நிலை ஏற்பட்டபோது அதுவே வானொலியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம் .        மார்கோனி லண்டன் அஞ்சலகத்தில் வானொலிக் குறியீடுகளைப் பரப்பி அதனைத் திரும்பப் பெற்றார் . மறுபடியும் அவர் வானொலி அலைகள் மூலம் செய்திகளை அனுப்பி 3.5 கி.மீட்டருக்கு அப்பால் அவற்றைப் பெற்றார் . 1901   ல் அவர் காரன்வாலிலுள்ள போலந்து எனும் இடத்தில் ஆற்றல் வாய்ந்த ஒலிப்பரப்பை  நிறுவினார். அதன் ஒலிக்குறிகள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நியுபவுண்ட்லாந்தில் செயிண்ட் லூண் எனும் இடத்தில் பெற்றார் . ரஷியர்கள் பலர் அலெக்சாண்டர் ஸ்டெப் நோவிப் பாபோப் என்பவரே கம்பியின்றிச் செய்தி அனுப்பும் முறையை மார்கோனிக்கு முன் கண்டுபிடித்தனர் எனக் கருதுவர் .இவரை மாண்புமிகு வானொலி அறிஞர் என்ற பட...

சங்க இலக்கியம்

 

பத்துப்பாட்டு,எட்டுத்தொகை ஆகிய இரு தொகை நூற்களும் சங்க இலக்கியங்கள் எனப்படும்,சங்கப் பாடல்களில் நீண்ட பாடல்களில் பத்தின் தொகுதி பத்துப்பாட்டு ஆகும்.கி.பி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பூரணர் பத்துப்பாட்டு என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.14 ஆம் நூற்றாண்டவரான மயிலைநாதரே முதலில் பத்துப்பாட்டு என்ற தொடரைக் குறிக்கிறார்.எனவே கி.பி 12-14 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் பத்துப்பாட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பர்.

 

             பத்துபாட்டு என்றும் பெயர் நிலைத்து விட்ட பிறகு அதற்கு இலக்கணமும் வகுக்கப்பட்டது.பன்னிருபாட்டியல் என்னும் இலக்கண நூல் பத்துப்பாட்டின் இலக்கணத்தை

    நூறடிச் சிறுமை நூற்றிப்பத்து அளவே

     ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்

     தொடுப்பது பத்துப் பாட்டெனப் படுமே

என்றும் கூறுகிறது.பத்துப்பாட்டு நூற்களின் பட்டியலை பழைய வெண்பா

       முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

         பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய

          கோல நெடுநல் வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்

          பாலை கடாத்தொடும் பத்து

எனக் கூறுகிறது.

           எட்டுத்தொகை               

எட்டுத்தொகை நூற்களைக் குறித்த பழைய வெண்பா ஒன்று[i]

        நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

         ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

         கற்றறிந்தார் ஏத்தும் கலியே எகு அகம்புறம் என்று

         இத்திறத்த எட்டுத் தொகை

எனக் குறிப்பிடுகிறது.



[i]

கருத்துகள்

கலைச்சொல்

11 ஆம் வகுப்பு இலக்கிய திறனாய்வு

இலக்கிய திறனாய்வு விடைகள்

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு 3

11 ஆம் வகுப்பு இலக்கியத் திறனாய்வு வினாக்கள் 2

இலக்கியத் திறனாய்வு 4 வினாக்கள்

இலக்கியத் திறனாய்வு 5 வினாக்கள்

புனைப் பெயர்கள்